பாடசாலை கீதம்
சிகரம் போல உயர்ந்திடும்
மலையகத்தின் மத்தியில்
சிறப்புடனே திகழ்வதெங்கள்
சிவானந்தா தமிழ் வித்தியாலயம.;
பார் போற்றும் உத்தமராய் பாங்குடனே வாழ்ந்திடவே
பலகலைகள் போதிக்கும் எங்கள் பள்ளி எங்கள் பள்ளியே
அன்னை மொழி செந்தமிழும் அறிவு மொழி ஆங்கிலமும்
உறவுக்காய் சிங்களமும் சினேகத்துடன் கற்று தரும்
பள்ளி எங்கள் பள்ளியே.
ஒழுக்கத்திலே உயர்ந்தவராம் தர்ம வழி நடப்பவராய்
சிந்தனையை உயர்த்தி நல்ல சிகரத்தில் ஏற்றிடவே
விளையாட்டும் வினோதமும் விந்தை தரும் விஞ்ஞானமும்
விதவிதமாய் கற்று தரும் அறிஞர் நிறை கூடமே
இலங்கை திரு நாட்டினிலே இனங்கள் பல ஒன்றிடவே
நாமெல்லாம் வாழ்த்தும் எங்கள் ஆலயமே
சிகரம் போல உயர்ந்திடும்
மலையகத்தின் மத்தியில்
சிறப்புடனே திகழ்வதெங்கள்
சிவானந்தா தமிழ் வித்தியாலயம்